23 செப்டம்பர், 2010

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்: நீதவான் உத்தரவு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்கும் படி கண்டி மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாகீயக்காவுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டிலே இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தடுத்துவைத்திருத்தல், இடைஞ்சல் விளைவித்தல், அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக பகிடி வதைச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு இவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் படி உத்தரவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக