23 செப்டம்பர், 2010

கைக்குழந்தையை விற்பனைக்காக சிலாபத்திற்கு கொண்டு சென்ற மூவர் கைது



கண்டி- இரங்கலை பொலிஸ் பிரிவில் இருந்து சிலாபம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்ற கைக்குழந்தை ஒன்றையும் சந்தேக நபர்கள் மூவரையும் இரங்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாய், குழந்தையை விலைகொடுத்து வாங்கவிருந்தவர் மற்றும் தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு தெல்தெனிய மாஜிஸ்திரேட் பிரசன்ன லியனகே முன் ஆஜர் செய்யப் பட்டபோது மேலதிக விசாரணைக்காக நால்வரையும் தடுத்து வைக்கும் படி அவர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக