23 செப்டம்பர், 2010

மதவாச்சி, நாச்சியாதீவில் கடும் காற்றால் 33 வீடுகள் சேதம்






அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள மதவாச்சி மற்றும் நாச்சியாதீவு பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 33 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்கடும் காற்று காரணமாக மதவாச்சி பிரதேசத்தில் 21 வீடுகளும், நாச்சியாதீவு பிரதேசத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்காற்றினால் சேதமடைந்துள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களுக்குத் தேவையான நிவாரண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக