12 ஆகஸ்ட், 2010

வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன பேர்னாட்


வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக பேர்னாட் குணதிலக தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முதல் அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்து புலம்பெயர் தமிழர்களிடம் சிலர் பணம் திரட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் கொல்லப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனின் கையொப்பங்களை காண்பித்து சிலர் பணம் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு சிலர் இலங்கைக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருவதாகவும், நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இன்று முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக