12 ஆகஸ்ட், 2010

தனியார் பஸ் போக்குவரத்து நேரத்தை அவதானிக்க நடவடிக்கை

தனியார் பஸ்களின் போக்குவரத்து நேரத்தை அவதானிக்கும் முகமாக புதிய முறையொன்றை அமுல்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தனியார் பஸ்கள் தேவையற்ற விதத்தில் தமது போக்குவரத்து நேரத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சிஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

பி.பி.ஆர்.என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முறையானது, முதலில் கொழும்பிலிருந்து அவதானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உரிய முறையில் சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சிஷி வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக