12 ஆகஸ்ட், 2010

சீன பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட திடீர் விபரீதம்

சீனாவில் பெண் குழந்தைகளுக்கு திடீரென மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உட்கொண்ட பால் பவுடர்தான் இந்த அசாதாரணமான வளர்ச்சிக்கு்க காரணம் என தெரிய வந்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

இதுகுறித்து விசாரணைக்கு சீன சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சீன நிறுவனம் தயாரித்த பால் பவுடர் குறித்து ஆராயுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் டெங் ஹைஹுவா கூறுகையில், குயிங்டாவோவைச் சேர்ந்த சிருத்ரா என்ற நிறுவனத்தின் பால் பவுடர் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பால் பவுடர் மாதிரி பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பால் பவுடர்தான், குழந்தைகளுக்கு அசாதாரணமான மார்பக வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த அசாதாரணமான மார்பக வளர்ச்சி இதற்கு முன்பு கேள்விப்படாததாக உள்ளது. எனவே இது உணவுப் பழக்க வழக்கம் காரணமாக ஏற்பட்டதா அல்லது சுற்றுச்சூழல் காரணிகளா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பால் பவுடரில் உள்ள ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் மார்பக வளர்ச்சியை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக