12 ஆகஸ்ட், 2010

அபராதம் செலுத்த முடியாத கைதிகள் விடுதலை : திணைக்களம் யோசனை

சிறு அபராதத் தொகைகளை செலுத்தமுடியாது சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யும் திட்டம் பற்றி சிறைச்சாலைத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

500 ரூபா முதல் 1500 ரூபா வரையான தொகையை அபராதமாகச் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவிப்பவர்களையே இவ்வாறு விடுதலை செய்ய திட்டமிடப்படுகிறது.

சாதாரணமாக ஒருநாளைக்கு ஒரு சிறைக் கைதிக்கு 270 ரூபா முதல் 300 ரூபா வரை செலவு செய்யப்படுவதாக அறியப்பட்டதையடுத்தே இத்திட்டம் பற்றி அதிகாரிகள் சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு 2000இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருவதாகத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக