11 ஆகஸ்ட், 2010

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு சடலமாக கிடக்கும் இவர்கள் யார் ?

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு சடலமாக கிடக்கும் இவர் யார் ? தினம் தோறும் இனம் தெரியாத சடலமாக மீட்கப்படும் இவர்கள் யார் ?
மன்னார் ஓலைத்தொடுவாய்க் கடற்கரைப் பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டு இன்று புதன்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அப்பகுதியில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மேற்படி சடலத்தைக் கண்டு கடற்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடற்படையினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். 30 வயது மதிக்கத்தக்க இவரது கையில் கடிகாரம் காணப்பட்டது. கறுப்பு நிற நீளக்காற்சட்டையும், வெள்ளை, கறுப்பு நிற சட்டையும் அணிந்துள்ள நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக