12 ஆகஸ்ட், 2010

அதிகாரியை கட்டி வைத்து தாக்குதல்: இலங்கை மந்திரி நீக்கம் ராஜபக்சே அதிரடி நடவடிக்கை





இலங்கை சாலை போக்கு வரத்து மந்திரியாக இருந்தவர் மெர்வின் சில்வா. இவர் முகமது இசாம் என்ற அரசு அதிகாரியை மரத்தில கட்டி வைத்து தாக்கினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெர்வின் சில்வாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து மெர்வின் சில்வாவை மந்திரி பதவியில் இருந்து அதிபர் ராஜபக்சே நீக்கினார். மேலும் அவர் சுதந்திரா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

மெர்வின்சில்வா ஏற்கனவே ஒரு தடவை அரசு டி.வி. டைரக்டரை தாக்கி இருக்கிறார். தனியார் தமிழ் சானல் நிர்வாகத்தையும் மிரட்டி வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக