12 ஆகஸ்ட், 2010

“சந்திரனில் தண்ணீர் இல்லை” அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்





சந்திரனில் தண்ணீர் உள்ளது என சமீப கால ஆய்வுகள் தெரிவித்தன. இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 செயற்கை கோள் நடத்திய ஆய்வில் சந்திரனின் வட துருவத்தில் தடிமனான பனிப்பாறை படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.

மேலும், அங்கு போதிய அளவு தண்ணீரும், கனிம வளங்களும் இருப்பதாக மற்ற ஆய்வுகள் கூறி வந்தன.

தற்போது, சந்திரனில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. அங்கு வறண்டு கிடக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட குளோரின் ஓரக கனிமங்கள் (ஐசோடோப்) ஆய்வு செய்யப்பட்டன.

அதில் சிறிதளவு கூட ஹைட்ரஜன் இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு இல்லை. இதனால் அங்கு மக்கள் வாழ கூடிய சூழ்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக