29 டிசம்பர், 2009



வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்
மேட்டு நிலத்தில் பயிரிட நடவடிக்கை
- பெரும்போகத்தின்போது 10,592 ஏக்கரில் பயிர்ச்செய்கை

வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்ட உள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிhச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ் மாவட்டத்தில் 10,963 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ்குடாவில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




கிழக்கில் மேலும் மூன்று ரயில் பஸ்
சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவை விரைவில் ஆரம்பிப்பு


கிழக்கு மாகாணத்தில் உள்ள+ர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக மேலும் 03 ரயில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இரு உள்ள+ர் ரயில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் வாழைச்சேனை உள்ள+ர் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார்.

கிழக்கில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக 05 ரயில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ரயில் பஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ரயில் பஸ்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்ட உள்ளன.

போர்நெருக்கடி காரணமாக கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து கிழக்கில் இயல்பு வாழ்க்கை முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிந்ததே.




வழக்குகள் தொடரப்படாதுள்ள கைதிகள்
விரைவில் விடுவிக்க விசேட ஏற்பாடுகள்
சட்ட மாஅதிபர் தெரிவிப்பு


வழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

இதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

இது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.

வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, ப+ஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக