28 டிசம்பர், 2009



புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் - 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


புதியபாதை சுந்தரம்
-



’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லைபதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்சுட்டும் செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்...சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்...உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்....விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலேஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவுசோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று....அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனேகுகபூசணிஇ பவானிஇ குருக்கள்பிறை சூடிக்குருஅப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவைநிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.அந்தாண்டு


‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்தகுண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்தியசாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்குமறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்.....பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தாரமதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்புதியபாதை’ பத்திரிகை-- புத்தாக்கச் சிந்தனையில்அடிமைப் பட்டதமிழ் மக்கள் விழிக்கவேண்டிமுடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராசரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.


எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்கண்மறைவாய் உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்....கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்தோழொடிந்த தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத்துடித்ததுவும்வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலேவண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.

வள்ளியம்மை சுப்பிரமணியம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக