30 டிசம்பர், 2009

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து . பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு


காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்ய
ப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சகல காவல்துறை உயரதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டமை குறித்த அறிவிப்பு சுற்று நிருபம் மூலம் சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக