27 டிசம்பர், 2009

சேதமடைந்த வட பகுதி வைத்தியசாலைகள்
சகல வசதிகளுடனும் மீளத் திறப்பு










புலிகள் இயக்கத்தினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி பிரதான ஆஸ்பத்திரி அடங்கலான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் அடங்கலான ஆளணி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

100 படுக்கையறை வசதிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எக்ஸ்ரே வசதி, இரத்த வங்கி வசதி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முழங்காவில் ஆதார வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு இங்கு 03 மருத்துவர்கள் உட்பட பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தவு வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதோடு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 04 அம்பிய+லன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப் பணிகளுடன் இணைந்ததாக சேதமாக்கப்பட்ட வைத்தியசாவைகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு மக்கள் நலனுக்காக திறக்கப்பட்டு வருகின்றது. மோதல்கள் இடம்பெற்றபோது புலிகள் பல வைத்தியசாலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருந்தது தெரிந்ததே.


நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

மலையகத்தின் நீண்டகால பிரச்சினையாக உள்ள குடிநீர் திட்டம் இதுவரை சீராக நடைபெறாமல் இருந்தது. இதற்குத் தீர்வாக 2003 ஆம் ஆண்டு முன்னைநாள் வீடமைப்பு, நிர்மாணத்தறை அமைச்சராக இருந்த சௌயமியமூர்த்தி தொண்டமான அவர்களால் அப்போது 03 குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையின் மூலம் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தித் திட்டங்கள் இப்பொழுது அமுலாக்கப்படுகின்றது. குறிப்பாக மலையகத்திலுள்ள கினிகத்தேனை, ஹட்டன், மற்றும் மஸ்கெலியா ஆகிய நகரம் மற்றும் சுற்றுப் பிரதேச மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களினூடாக ஹட்டன் நகர சபையும் சேர்ந்து இன்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அத்தாவுல்லா அவர்களால் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் இளைஞர் வலுவ+ட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், ஜெகதீசன் மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகர சபைத் தலைவர் நந்தகுமார், பிரதேச சபையின் செயலாளர் நகுலேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள். ஹட்டன் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்திற்கு குடிநீர் வழங்காததையடுத்து நீர் விநியோகம் செய்யவும், கினிகத்தேனை நகரம் மற்றும் சுற்றுப்புற மக்கள் நலன்கருதி லொனொக்கில் இருந்து நீரை விநியோகம் செய்யவும் மஸ்கெலியாவிற்கு புரொன்ஸ்விக் இலிருந்து நீரை விநியோகம் செய்யவும் அபிவிருத்தித் திட்டமாக அமைகின்றது.

நீண்ட நாட்களாக மலையத்தில் நிலவிவந்த குடிநீர்ப் பிரச்சினை இந்த மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் மூலம் தீர்வு அடைய சாத்தியமாயிற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக