10 அக்டோபர், 2010

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டவர் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்பு

காத்தான்குடி வாவியில் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது முதலையினால் நீருக்கடியில் இழுத்துச் செல்லப்பட்ட மீனவர் இன்று காலை கடித்துக்குதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படையினரும் பொலிஸாரும் பல மணித்தியாலங்கள் போராடி இச்சடலத்தை மீட்டுள்ளனர். கண் மற்றும் அவரது உடலின் பலபாகங்களை முதலை கடித்து உண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த நபர் 5 பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய தம்பிலெப்பை புஹாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பத்காரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக