10 அக்டோபர், 2010

இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் இலங்கைக்கு வருகை

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் பிரிவின் நான்கு கப்பல்கள் இன்றுகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. இக்கப்பல்கள் கொழும்பு மற்றும் திருமலைத் துறைமுகங்களின் நங்கூரமிட்டுள்ளன. இந்திய கடற்படையின் தரங்கினி கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளதுடன், வீர, சர்துல் மற்றும் வருண ஆகிய கப்பல்கள் திருமலைத் துறைமுகத்திற்கு வந்துள்ளன. இவற்றில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 160 கடெற் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இக்கப்பல்கள் இம்மாதம் 15ம் திகதிவரை நாட்டில் தரித்து நிற்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல்கள் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக