10 அக்டோபர், 2010

போதைப்பொருள் பாவனை: ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்

உலகின் போதைப்பொருள் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு அதன் விற்பனை 7 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐ.எம்.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வளர்முக நாடுகளில் மது,போதை பாவனை அதிகரித்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் 17 நாடுகளை 'போதை பாவனை அதிகம் உள்ள நாடுகளாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீனா, பிரேசில், ரஸ்யா, இந்தியா, மெக்சிகோ, துருக்கி, வெனிசுலா, போலந்து, ஆர்ஜன்டீனா, இந்தோனேசியா, உக்ரெய்ன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, எகிப்து, ருமேனியா, பாகிஸ்தான், வியட்னாம் ஆகிய நாடுகளே இவையாகும்.

இந்த அதிகரிப்பு வீதத்தினால் அந்த நாடுகள் பெரும் எதிர்விளைவுகளை ஏதிர்நோக்கும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக