10 அக்டோபர், 2010

ஜனாதிபதி தலைமையில் வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை

வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நாளை மாதம்பையிலுள்ள கூட்டுறவுச் சங்க நடன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்ன, மற்றும் குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கவுள்ளனர். வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க உட்பட மாவட்டங்களின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக