11 அக்டோபர், 2010

ரூ.4 கோடி பரிசு அறிவிக்கப்பட்டஅல்-குவைதா தலைவர் பலி


பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், அல்- குவைதா அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.லிபியா நாட்டைச் சேர்ந்தவர் அதியா அப்த் அல் ரஹ்மான். இவர், அல்-குவைதா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வடக்கு வாசீரிஸ்தானில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில், ரஹ்மான் மற்றும் அவருடன் இருந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அல்-குவைதாவைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரான காலித் முகமது அப்பாஸ் அல் ஹராபியும் இதேபோன்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக