11 அக்டோபர், 2010

ஜனாதிபதிகளின் பாரியார் மாநாடு கோலாலம்பூரில் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பயணம்


மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஜனாதிபதிகளின் பாரியார் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று மலேசியா பயணமானார்.

நேற்றுக்காலை 7.00 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பயணமானதுடன் முற்பகல் 11 மணியளவில் அவர் மலேசியாவின் கோலாலம்பூர்

விமான நிலையத்தைச் சென்றடைந்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித் தது.

மலேசியாவில் நடைபெறும் ஜனாதி பதிகளின் பாரியார்கள் மாநாட்டுக்கு மலேசியப் பிரதமர் மொகமட் நஜீட் நுன் அப்துல் ரஸாக் தலைமை தாங்கவுள்ளார்.

இம்மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதிகளின் பாரியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்து முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்க ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வுள்ளனர்.

‘இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் மேற்படி மாநாடு மலேசியாவில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக