11 அக்டோபர், 2010

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க விமான பயணிகளின் காதுகளை “ஸ்கேன்” செய்ய முடிவு





உலகில் தீவிரவாதம் பெருகிவிட்டது. எனவே தீவிரவாதிகளை கண்டு பிடிக்க விமான நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்வதால் கைரேகை பரிசோதிக்கப்படுகிறது. ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை அறிய உடல் முழுவதும் “எஸ்க்ரே” மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது.

தற்போது புதிய முறையை கடை பிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மனிதர்களின் காது அமைப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

எனவே விமானத்தில் பயணம் செய்பவர்களின் காதுகளை ஸ்கேன் செய்தால் போதும். அதில் இருந்தே பயணம் செய்பவர் தீவிரவாதியா? அல்லது சாதாரண நபரா? என தெரிந்துவிடும்.

இது சரியான திட்டம் என இங்கிலாந்தில் உள்ள சவுதாம் டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், முகத்தில் “மேக் அப்” போட்டு உருவத்தை மாற்ற முடியும். மேலும் முக பாவனைகள் மூலமும் தப்பிக்க முடியும்.

ஆனால் மனித உறுப்புகளில் “காது” தனிச்சிறப்பு வாய்ந்தது. அவை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே காதின் அமைப்பை துள்ளியமாக ஸ்கேன் செய்தாலே போதும். பாஸ்போர்ட்டுடன் வருபவர் ஒரிஜினலா? அல்லது போலியா? என தெரிந்து விடும் என தெரிவித்துள்ளனர். இக்கருத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக