11 அக்டோபர், 2010

பொன்சேகா விடுதலை : கட்டுகஸ்தோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

கண்டி மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கட்சியின் ஹரிஸ்பத்துவ கிளையினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.பீ.டி. அல்விஸ், பூஜாப்பிட்டிய பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எம்.கலீல் உட்படப் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற பல்வேறு விதமான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தினால் கண்டி மாத்தளை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக