11 அக்டோபர், 2010

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்கு துறை அமைக்க அனுமதி.

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்கு துறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை கல்லாறு பகுதி கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கடற்கரை ஓரங்களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு தற்போது வனப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறியமுடிகிறது.

ஆனால் உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் அப்பிரதேச மீனவர்கள் அங்கு மீனவர் தங்குமிடங்களை அமைத்து தங்களது தொழில்களை மேற் கொண்டனர்.

ஆனால் தற்போது அங்கு அமைக்கப்பட இருந்த இறங்கு துறையினை அமைப்பதில் பல்வேறு இடர்பாடுகளை தாம் எதிர் நோக்கி வருவதாக அப் பிரதேச மீனவர்கள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து இன்று இது தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து அப் பிரதேசம் உண்மையில் மீனவர்களுக்கான பிரதேசமாக இருப்பதனால் அங்கு இறங்கு துறையினை அமைப்தற்கு மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக