11 அக்டோபர், 2010

யாழ்ப்பாணத்தில் இன்று உயர்மட்ட மாநாடு; ஆளுநர் தலைமை; அரச அதிபர்கள் பங்கேற்பு

வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த மாநாட்டின் போது விரிவாக ஆராயப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ்பிள்ளை ஆகியோர் மாவட்டங்களில் முன்னெடுக்கப் பட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான பூரண அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக