11 அக்டோபர், 2010

அ’புரம் - வவுனியா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது






ரயில் பாதை திருத்த வேலைகள் காரணமாக கடந்த இரு தினங்களாக தடைப்பட்டிருந்த அநுராதபுரம் வவுனியா ரயில் சேவைகள் நேற்றிரவு முதல் வழமைக்குத் திரும்புயுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அநுராதபுரம்- வவுனியா பிரதான ரயில் பாதையில் சாவியபுரம் மிஹிந்தலை பகுதிகளில் மேற்படி பாதை சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென கடந்த 8ம் திகதி முதல் அநுராதபுரம் –வவுனியாவுக்கிடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிணங்க கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப் பட்டிருந்தன.

ரயில் பாதை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்றைய தினம் இரவு ஏழு மணியுடன் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பிய தாக ரயில்வே பிரதி பொது முகாமை யாளர் விஜய சமரசிங்க தெரி வித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக