11 அக்டோபர், 2010

வடக்கில் பலகோடி ரூபா செலவில் முதலீடு; ஆறு முன்னணி நிறுவனங்கள் முன்வருகை ஆளுநர் சந்திரசிறி வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேச்சு


வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள ஆறு முன்னணி தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும், முன்னணி தொழிற்சாலைகளின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, இணக்கம் காணப்பட்டுள்ளது.

வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவுற்று வரும் நிலையில் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை பிரதேசத்தில் சுமார் 100 கோடி ரூபா செலவில் ஒமேகா லைன் என்ற நிறுவனம் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்காக வட மாகாண சபை 10 ஏக்கர் நிலப்பரப்பு காணியை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த மாதமளவில் இந்த தொழிற்சாலையை நிறுவு வதற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றும் சுட்டிக் காட்டினார்.

ஹைதராமணி நிறுவனம் வவுனி யாவின் நெலுங்குளத்திலும், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் ஓமந்தை யிலும், ஒரிட் அபரல் நிறுவனம் செட்டிக்குளத்திலும், பிரன்டிக்ஸ் நிறுவனம் வவுனியா அல்லது மன்னாரிலும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளன.

ட்ரைஸ்டார் நிறுவனம் கிளி நொச்சி நகரில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவு வதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளை ஆரம்பித் துள்ளது என்றும் ஆளுநர் குறிப் பிட்டார். வட மாகாண அபிவிருத் திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொருளாதார அபி விருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்க மைய இந்த நடவடிக்கை முன்னெ டுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபை ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் தமது செயற்பாடுகளை முன்னெடுக் கவுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இதற்குத் தேவையான சகல ஒத்து ழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்குத் தேவையான புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக