13 மார்ச், 2010

நிற்கதியாகவுள்ள கோவில் குளம் பிரதேச மக்கள்




மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கோவில் குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் சிறு கண்டல் நலன்புரி நிலையம், கழிமோட்டை நலன்புரி நிலையம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததோடு பல உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

இவர்களுள் 48 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீள் குடியேற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டு கோயில்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டனர் .

இவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அழைத்துச் செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் . சிறுவர் பெண்கள், வயோதிபர்கள் என 350 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அணைவரையும் தற்போது அருகில் உள்ள வீடுகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் பனித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது . எனினும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள தோடு ஒருசில வீடுகலே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக