13 மார்ச், 2010

இந்தியா-பாக். ஏவுகணை சோதனை பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு




அண்மையில் தான் இந்தியா-பாக். நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இந்நிலையில் இரு நாடுகளும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா சில நாட்களுக்கு முன் ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்குப் போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவியது. அது அரபிக்கடலில் குறிப்பிட்ட இலக்கைத் தாக்கியது. இந்தச் சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாகிஸ்தான் கடற்படை அறிவித்துள்ளது.

சமீபத்தில்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இருநாட்டு வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது அடுத்த பேச்சுவார்த்தையை பாதிக்கக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக