13 மார்ச், 2010

பிமிஹின்பீ லங்கா சேவை இலாபத்தில் மேலுமொரு விமானத்தை கொள்வனவு செய்யத் திட்டம்






மிஹின் லங்கா விமான சேவை கடந்த மூன்று மாதங்களுக்குள் அதி கூடிய இலாபம் கண்டிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார்.

கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களில் 300 சதவீத இலாபம் அடைந்ததன் மூலம் தமது வாக்குறுதியை காப்பாற்றி யுள்ளோமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இத னைத் தெரிவித்தார்.

மிஹின் லங்காவின் பிரதான குறிக் கோள் தலயாத்திரிகர்களுக்கும் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக்கும் குலு றந்த செலவில் சேவை வழங்கு வதாகும்.

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிதாக இன் னொரு விமானத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம்.

அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் விமானச் சீட்டின் கட்டணத்தை 10 தவணைகளில் செலு த்துவதன் மூலம் வெளிநாடொ ன்றுக்கு பயணம் செய்யலாம். இந்த சலுகையை இராணுவ வீரர்களுக்கும் வழங்கவுள்ளோம் என அவர் தெரி வித்தார்.

இதேவேளை பேங்கொக்கிலு ள்ளவர்களை சலுகையடிப்படையில் இலங்கைக்கு அழைத்து வரும் திட்டமொன்றினை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக