13 மார்ச், 2010

ஒரு லட்சம் பேரை குடியமர்த்த இலங்கையிடம் கனடா கண்டிப்பு


டொரண்டோ:"முகாம்களில் உள்ள தமிழர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கை குறித்து, அங்குள்ள தமிழ் அமைப்புகளிடம் பேச்சு நடத்த வேண்டும்' என, இலங்கை அரசிடம், கனடா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கனடா வெளியுறவு அமைச்சரின் பார்லிமென்ட் செயலர் தீபக், இலங்கை தூதரக அதிகாரியிடம் கூறியதாவது:இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள் நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு இதுவே நல்ல வாய்ப்பு. முகாம்களில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்துவதன் மூலமே, இந்த அமைதியை நீட்டிக்க முடியும். இன்னும் ஒரு லட்சம் பேர், முகாம்களில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை மறு குடியமர்த்துவது தொடர்பாக, அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்.இவ்வாறு தீபக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக