13 மார்ச், 2010

பயங்கரவாதம் ஏற்பட்டதற்கான மூலகாரணத்தை கண்டறிய குழு

நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டத ற்கான மூலகாரணத்தைக் கண்டறிய அரசாங்கம் குழுவொன்றை நியமிக் கவுள்ளது.
பயங்கரவாதம் மீண்டும் ஏற்படா திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசனை களை வழங்கும் வகையில் இந்தக் குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர் மானித்துள்ளதாக இடர் முகாமை த்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் அமைச்சர் இத னைக் கூறினார்.

முப்பது வருடங்களாக நாடு அரசியல் சமூக, பொருளாதார, துறைகளில் ஸ்தீரமற்ற நிலையில் இருந்து வந்தது.

எனவே மீண்டும் அந்த நிலையை உருவாக்க நாம் தயாரில்லை. எனவே இனங்களுக்கிடையே நல்லி ணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் அபி விருத்தியை மேற்கொள்ள வேண் டும்.

என்று கூறிய அமைச்சர் சமரசிங்க, நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து பரிந் துரைக்கவே குழு நியமிக்கப்படுவதா கவும் அந்தக் குழு பற்றிய விபரங்கள் வெளியிடப்படுமென்றும் கூறினார்.

புஎமது நாட்டின் தேவை எமக்குத் தான் தெரியும். 38 வருட அரசியல் அநுபவமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்களின் அபிலா ஷைகள் என்னவென்று புரியும்.

பதினொரு ஆயிரம் புலி உறுப் பினர்களை நாம் புனர்வாழ்வளித்து வருகிறோம்.

அவர்களையும் சமூகமயப்படுத்தி நற்பிரஜைகளாக வாழவைக்க முயற் சிக்கின்றோம். நாட்டை முன்னேற் றுவதற்காகவே மூன்றிலிரண்டு பெரும் பான்மை ஆதரவை ஜனாதிபதி கோருகின்றார். எந்த நாட்டினதும் இறக்குமதி செய்யப்படும் தீர்வு எதுவும் எமது நாட்டுக்குத் தேவை யில்லை என்றும் அமைச்சர் குறிப் பிட்டார்.

நேற்றைய செய்தியாளர் மாநா ட்டில் ஜனாதிபதி செயலகத்தின் செய்தி ஆய்வு மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் லூஷியன் ராஜகருணாநாயக்கவும் கலந்துகொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக