21 ஜனவரி, 2011

தலதா மாளிகையில் மரம் ஒன்றை வெட்டிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்




ஸ்ரீதலதா மாளிகையின் மரம் ஒன்றை வெட்டியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கண்டி தலதாமாளிகைக்குச் சொந்தமான காணியில் உள்ள மரம் ஒன்றை வெட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராதனைப் பொலிஸார் செய்து கொண்ட முறைப்பாட்டை அடுத்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தில் கைது செய்யப் பட்டவர் அக்காணியின் பாதுகாப்புடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியான சேனக ஜகத்குமார என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக