21 ஜனவரி, 2011

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை


அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார். சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார்.

கடத்தல், துன்புறுத்தல், நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக