21 ஜனவரி, 2011

கொழும்பு துறைமுகத்துக்கு 31 கம்பனிகளின் சேவைகள்




30 வருட கால யுத்தம் காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் காப்புறுதி வரி மற்றும் லொயிட்ஸ் காப்புறுதி நிறுவனம் விதித்திருந்த தடைகள் ஆகியவை நீக்கப்பட்டதை அடுத்து உலகின் சிறந்த 31 கப்பல் கம்பனிகள் கொழும்பு துறைமுகத்துக்கான சேவை களை ஆரம்பித்துள்ளன.

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது என்று துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுண வர்தன தெரிவித்துள்ளார்.

இதில் 10 சேவைகள் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த கப்பல் சேவைகளை எதிர்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக் கும் பரிமாறிக்கொள்வதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக