21 ஜனவரி, 2011

இலங்கையின் போர்க் குற்றங்களை சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டும்


இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மசாசூசெட்ஸ் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான எட்வர்ட் ஜே. மார்க்கி என்பவரே கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் உரையாற்றும்போது மேற்குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அவர், தனது கருத்துக்கு ஆதரவாக இன்னும் 57 உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாங்கள் அனைவரும் இணைந்து, குறித்த வேண்டுகோளை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக