21 ஜனவரி, 2011

அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்க நடவடிக்கை: விமல் வீரவன்ச




அரிசிமாவு மூலம் பாண் தயாரிக்கும் போராட்டம் ஒன்றை பொறியில் சேவை,பொதுவசதிகள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச முன் எடுத்து வருகின்றார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வியாங்கொடையில் அவ்வாறான ஒரு அரிசி மாவு பதனிடும் தொழிற்சாலை திறக்கப் பட்டுள்ளதாகவும் 200 வெதுப்பக (பேக்கரி)உரிமையாளர்கள் இதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவு போல் மிக மெண்மையாக அரிசி மாவை அரைப்பது தொடர்பான தாமதமே இது பின்னடைவாவதற்குக் காரணம் என்றும் தற்போது 50 ற்கு 50 என்ற விகிதத்தில் கோதுமை மாவையும் சேர்த்தே புதிய அரிசிமா பாண் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக