21 ஜனவரி, 2011

போயா தினத்தில் மாடு அறுத்தவர்களுக்கு விளக்கமறியல்

போயாதினமான புதன் கிழமை விற்பனைக்காக மாடுகளை அறுத்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் கே. ஜீவரானி உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து புதன்கிழமை அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 நபர்களையும் முருங்கன் பொலிஸார் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சந்தேக நபர்களில் இருவரை சரீரப்பிணையில் விடுதலை செய்ததோடு ஏனைய 3 சந்தேக நபர்களையும் இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக