8 செப்டம்பர், 2010

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் நேற்று வரலாறு காணாத ஜன சமுத்திரம்






நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது.

தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

நேற்று அதிகாலை தொடக்கம் ஆலயத்தை நோக்கி பெருந்தொகையான பக்தர்கள் கூடத்

தொடங்கியதால் ஆலயப் பிரதேசம் சமுத்திர வெள்ளமாகக் காட்சியளித்தது. பொலிஸார் ஆலய வளாகத்தில் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனைத்து பொலிசாரும் தங்களினது பாதத்தில் இருந்த பாதணிகளை அகற்றிய நிலையில் காணப்பட்டனர்.

ஆலயத்திற்குள்ளேயும் ஆண் பொலி ஸாரும், பெண் பொலிஸாரும் சாதாரண பொதுமக்களைப் போல உடையணிந்து காவல்கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.

ஆலய உள்வீதிகளில் திருடர்களைக் கண்டுபிடிப்பதற்கென வீடியோக் கமெராக் கள் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வருடத்தில் அதிகளவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஒருசிலரின் நகைகளே திருடப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு வருகை தந்த பெரும்பாலான பக்தர்கள் நகைகளை கூடுதலாக அணிந்து வரவில்லை. பொலிஸாரும், யாழ் மாநகர மேயரும் கேட்டுக்கொண்டதற்கு அமைய மக்கள் இம்முறை அவதானமாக இருந்தனர்.

தேர்த்திருவிழா நேற்றுக் காலை ஆரம்பமானதும் கொடித்தம்பபூசை, வசந்த மண்டப பூசை என்பன நடைபெற்றன. நல்லை கந்தன், வள்ளி தெய்வானை சமேதராக காலை 7 மணிக்கு தேருலாவுக்காக ஆரோகணித்து வந்தார். காலை 7.15 மணிக்கு முருகப் பெருமானின் தேர்பவனி ஆரம்பமானது.

பெருந்திரளான மக்களின் அரோகரா கோஷம் ஒலிக்க பஜனைக் கோஷங்களின் பண்ணிசை ஒலிக்க முருகப் பெருமான் வீதியுலா வந்தார். தேரினைத் தொடர்ந்து பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் அங்கப் பிரதிஷ்டை செய்தும் அடியழித்தும் முருகப் பெருமானைத் தரிசித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக