8 செப்டம்பர், 2010

மட்டு. மாவட்ட மீனவருக்கு தோணிகள் அன்பளிப்பு

கிழக்கு மாகாண சபையின் விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி தோணிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன நேற்று மாலை வழங்கப்பட்டன.

மட். களுதாவளை மகா வித்தியாலத்தில் மீன்பிடி தோணிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரத்தின ராஜா சபை உறுப்பினர் பிரசாந்தன் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் உட்பட அதிகாரிகள், மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 90 மீனவர்களுக்கு 45 தோணிகளும் 600 வலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக