8 செப்டம்பர், 2010

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிற்கு மீளவும் பிரதி அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற 18 ஆவது அரசியல் சீர்திருத்தம் வாக்கெடுப்புக்கு பிறகு கட்சி செயற்குழு கூட்டத்தினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டியமைக்காக மேர்வின் சில்வாவின் பிரதி அமைச்சுப் பதவி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவி என்பன பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக