8 செப்டம்பர், 2010

பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை (காணொளி இணைப்பு

பெண் ஒருவரை மோசமான முறையில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிரித்தானிய நீதி மன்றமொன்று 6 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் 57 வயதான பமீலா சொமர்விலி என்ற பெண்ணை மிகவும் மோசமாக தரையில் இழுத்துத் தள்ளி, அடித்துக் காயப்படுத்தியமை பாதுகாப்பு கெமராவில் தற்செயலாகப் படம் பிடிக்கப்பட்டது.

அவர் இரத்தம் சிந்தும் காட்சி உட்பட அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

மேற்படி பெண், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமையையடுத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

மேற்படி வழக்கினை விசாரித்த ஒக்ஸ்போர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு மேற்படி தண்டனையை வழங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக