8 செப்டம்பர், 2010

18 ஆவது அரசியல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் இன்று ஆரம்பம்




18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விவாதம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.

பிரதமர் டி எம் ஜெயரட்ன, 18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

இதனையடுத்து இன்று நடைபெற உள்ள விவாதத்தின் போது வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு இடம்பெறவுள்ளது.

இந்தஙூ சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற 150 வாக்குகள் தேவை.

எனினும் அரசாங்கத்தில் ஏற்கனவே உள்ள 144 ஆசனங்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 ஆசனங்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் 7 ஆசனங்களுமாக மொத்தமாக 159 ஆசனங்கள் அரசாங்கத்துக்கு சார்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக