19 அக்டோபர், 2010

கோல்டன் கீ கம்பனியின் கீழுள்ள சொத்துகள் புதிய நிறுவனத்திடம் ஜனாதிபதி - வைப்பாளர் சந்திப்பில் முடிவு

கம்பனி சட்டத்தின் கீழ் பொதுக் கம்பனியொன்றினை ஆரம்பித்து கோல்டன் கீ கம்பனியின் கீழுள்ள சொத்துக்களை அந்த கம்பனியிடம் கையளிப்பதற்கும் கோல்டன் கீ கம்பனியின் பங்குதாரர்களை இந்த புதிய கம்பனியின் பங்குதாரர்களாக மாற்றுவதற்கும் நேற்று (18) முற்பகல் கோல்டன் கீ வைப்பாளர்களின் சங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் நடைமுறையிலிருந்த கோல்டன் கீ கம்பனியின் சொத்துக்களை புதிதாக அமைக்கப்படவுள்ளமிறிவிமி எஓஇஎ நஙீடீஷடுஹங் டசீஙுஙீச்ஙூடீ யடீகீடுஷங்டீ (டசுசி) கசிக்ஷ (எஓஇஎநடய) எனும் புதிய கம்பனியிடம் ஒப்படைத்ததன் பின்னர் வைப்பாளர்களின் வைப்பு மீதியின் விகித்தத்திற்கேற்ப புதிய கம்பனியின் பங்குகளை கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு வழங்கப்படும். அதன்படி அவர்கள் புதிய கம்பனியின் பங்குதாரர்களாக மாறுவர்.

புதிய கம்பனியானது சொத்துக்களை முகாமையின் மூலம் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. மேலும் இந்தக் கம்பனிக்கு கோல்டன் கீ கம்பனியின் வைப்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பணிப்பாளர்களும் ஆலோசனை சபையொன்றும் நியமிக்கப் படும். கம்பனியின் தொழிற்பாடுகள் அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தக் கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் வைப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பொதுக் கம்பனி தொடர்பான திட்டம் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் இலங்கை மத்தியவங்கி இதற்கான ஏற்பாட்டாளராக செயற்படும்.

கோல்டன் கீ வைப்பாளர்களின் சங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது கோல்டன் கீ வைப்பாளர்கள் முகம்கொடுத்துள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக அவதானம் செலுத்தி இந்த தீர்மானங்கள் எடுக்கப் பட்டன.

இதேவேளை, இச்சந்திப்பு தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்; கோல்டன் கீ கம்பனியின் பங்குதாரர்களுக்கு 26 பில்லியன் ரூபா நிதி திருப்பிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

லலித் கொத்தலாவலவிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை முதலீடாக வைத்தே இப்புதிய நிறுவனம் தொடக்கங்கப்படும். இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்திற்குள்ளாகவே பங்குதாரர் களின் அனைத்து முதலீடுகளும் அவற்றின் பெறுமதிக்கேற்ப வட்டி யுடன் கட்டங்கட்டமாக திருப்பிச் செலுத்தப்படுமெனவும் கூறினார்.

மேலும் கைவிடப்பட்ட தனியார் நிதி நிறுவனமொன்றை மறுசீரமை க்க ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் முயற்சி சிறந்ததொரு உபாய மார்க்கமெனவும் அவர் சுட்டிக் காட்டி னார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக