19 அக்டோபர், 2010

வெலிக்கடை சிறை பெண்கள் பிரிவில் சுற்றிவளைப்பு கைத்தொலைபேசிகள், பற்றரிகள், கஞ்சா சுருட்டுகள் மீட்பு


உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலி ஸார் நாற்பது பேர் அடங்கிய விசேட குழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின் போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த விசேட குழுவினர் சிறைச் சாலை அதிகாரிகள் 15 பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலு ள்ள கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவ தாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழு ம்பு மாளிகாகந்தை நீதிவான் நீதி மன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென நுழைந்த விசேட குழுவினர் திடீர் சோத னையை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்த ப்பட்ட திடீர் சோதனை நடவடி க்கையின் போது தடுத்து வைக்கப் பட்டிருந்த 464 பெண்கள் சோத னைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் சோதனையின் போது 44 கஞ்சா சுருட்டுகள், 53 கையட க்கத் தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப் படும் 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்கள், 5 மல்டி பிளக் மற்றும் தண்ணீர் சூடாக்கப் பயன் படுத்தப்படும் ஹீட்டர்கள் என்ப வற்றை மீட்டெடுத்துள்ளனர்.

மேற்படி பொருட்கள் சிறைச் சாலைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரி வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக