19 அக்டோபர், 2010

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருவார்

நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலங்கைக்கு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வந்திருந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் அடுத்த வருட முற்பகுதியில் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் நோர்வேயின் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட சொல்ஹெயிமின் இந்த விஜயமே, யுத்தம் முடிவடைந்தன் பின் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக