19 அக்டோபர், 2010

வேலைவாய்ப்புக்கு ஆட்களை அனுப்பாத வெளிநாட்டு முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து


வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளு க்கு ஆட்களை அனுப்பாத வெளிநாட்டு முகவர் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப் படவிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது.

அத்தகைய முகவர் நிலையங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

சில வெளிநாட்டு முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் அவை எவரையும் வேலை வாய்ப்புக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. அவ்வாறு உறுதி செய்யப்படும் முகவர் நிலையங்களை தடை செய்யும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

சில முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் வேறு முகவர் நிலையங்களினூடாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக