19 அக்டோபர், 2010

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு வடக்கு, கிழக்குக்கு நாளை பயணம்

கொழும்புக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பொதுநல வாய சங்கத்தின் பிரித்தானிய கிளையைச் சேர்ந்த பதினொரு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததுடன் இன்று (19 ம் திகதி) பிரதமர் டி. எம். ஜயரட்னவையும், சபா நாயகர் சமல் ராஜபக்ஷவையும் பாராளு மன்றத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை இன்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யும் இக் குழுவினர் இளம் எம். பி. க்கள் குழுவையும், தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவையும் ஐ. தே. க. வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவையும் சந்தித்துக் கலந்துரையாடவி ருக்கின்றனர். இக் குழுவினர் நாளை (20 ஆம் திகதி) யாழ். குடா நாட்டுக்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

பொதுநலவாய சங்கத்தின் பிரித்தானிய கிளையிலிருந்து ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று பிரபுக்களையும் உள்ளடக்கிய பதினொரு பிரதிநிதிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஏழு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று மாலையில் சந்தித்து கலந்துரையாடி யதுடன் நேற்று நண்பகல் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவையும் சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் பதில் வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவையும் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் குழுவினர் நாளை யாழ். குடா நாட்டுப் பாதுகாப்பு படை தலைமை யகத்திற்கு சென்று கலந்துரையாடல் களையும் நடாத்தவுள்ளனர்.

இவர்கள் புனரமைப்பு பணிகள் இடம்பெறும் கிராமங்களையும், கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட வுள்ளனர்.

இக்குழுவினர் யாழ்ப்பாண கச்சேரியில் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரை யாடவுள்ளதுடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும், யாழ்ப்பாண கோட்டைக்கும் செல்லவுள்ளனர். இக் குழுவினர் மறு நாள் 21 ஆம் திகதி திருமலையில் ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் ஆகியோரை சந்தித்துப் பேச வுள்ளனர்.

அத்தோடு மாவட்ட செய லாளருடனும், சமூகங்களின் பிரதிநிதி களுடனும், படைத் தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்துவதுடன் இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள பிரதேசங்களையும் பார்வையிடுவர் என்று உதவி பாராளுமன்ற மரபொழுங்கு களுக்கான அதிகாரி ஸஹ்ரான் இல்லியாஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக