19 அக்டோபர், 2010

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை


திருமணம் முடிப்பதாகக் கூறி ஆசி ரியை ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றார் என்று கூறப்படும் சம்பவம் தொடர் பாக விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. 25 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கான இரு சரீர பிணை களுடன் செல்ல கண்டி மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க நேற்று அனுமதி வழங்கினார்.

இம்மனு மீதான விசாரணை கண்டி மாஜிஸ்ரேட் மன்றில் மேல திக நீதவான் முன்னிலையில் எடுத் துக் கொள்ளப்பட்ட போது மேல திக நீதவான் இவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அதேநேரம் வெளிநாட்டுப் பய ணங்களை மேற்கொள்ளுவதாயின் முன்கூட்டியே நீதிமன்றத்திற்கு அறி விக்க வேண்டும் எனவும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வழியில் முறைப் பாட்டுக்காரரை அச்சுறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் முடிப்பதாக கூறி ஆசி ரியை ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றார் என்று கூறப்படும் சம்பவம் தொடர் பாக ரஞ்சன் ராமநாயக்கா எம்.பி யை கண்டி விசேட குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினர் கடந்த 14ம் திகதி கைதுசெய்தது தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக