19 அக்டோபர், 2010

வலது குறைந்தவர்களுக்கு விசேட ரயில் நிலையங்கள்


வலது குறைந்தவர்கள் பயன்படுத்தக் கூடியவாறு வட பகுதிக்கான ரயில் நிலையங்களை நிர்மாணிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அப் பகுதியில் ஆய்வொன்று நடத்தப்பட்டதாக ரயில்வே திணைக்கள வணிக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். இது தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வட பகுதிக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார். பளையில் இருந்து காங்கேசன்துறை வரை அமைக்கப்படும் ரயில் நிலைய ங்களிலும் மதவாச்சியில் இருந்து தலை மன்னார் வரை அமைக்க ப்படும் ரயில் நிலையங்களிலும் வலது குறைந்தவர்களுக் கென விசேட வசதிகள் செய்யப்படவுள்ளன. இவர்களுக்கென தனியான மலசல கூடங்களும் நிர்மா ணிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி வலது குறைந்தவர்களுக்கு மற்றவரின் உதவியுமின்றி சுதந்திரமாக ரயில் நிலையங்களில் நடமாட முடியும் என அறிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தென் பகுதியிலும் இத்தகைய வசதிகள் செய்யப்படும் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக