21 ஜூலை, 2010

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : தடா நீதிமன்ற நீதிபதி ஓய்வு

ராஜீவ் காந்தி undefinedகொலை வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சென்னை தடா நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.ராமலிங்கம். ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகிய இருவர் மட்டும் பிரிக்கப்பட்டு தனியாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ராமலிங்கம்தான் விசாரித்து வந்தார்.

ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரன் இறந்திருந்தால் அவரது இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இதுவரை சான்றிதழை இந்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் ராமலிங்கம் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக